நம்ம மக்கள் ஏன் எப்பவுமே பைனரியிலேயே முடிவு எடுக்குறாங்க?
உனக்கு ஜெயலலிதாவப் புடிக்காதா? அப்ப நீ தி.மு.க,
பெரியாரை விமர்சனம் செஞ்சா பார்ப்பனர்,
கடவுள் பத்தி கொஞ்சம் சந்தேகம் என்றால் - நாஸ்திகன் - என்னங்க இது அக்கிரமமா இருக்கு (அதும் இணையத்தில் இந்தக் கொடுமை ரொம்ப). நம்ம ஜார்ஜ் புஷ் சொன்ன மாதிரி - நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எங்கள் எதிரிகளுடன் கூட்டாளி என்று அர்த்தம் - இதுவே நம் வழக்கமாகிப்போய் பலருடன் எனக்கு சங்கடம் நேர்ந்திருக்கிறது. சாதாரண கருத்துக்கணிப்புகளிலேயே ஆம்/இல்லை/தெரியாது என சாய்ஸ் இருக்கும்போது ஏன் இந்த பைனரி முடிவு?
=======================================
உலகத்திலேயே ரொம்பக் கொடுமையான வலி எதுனு சொல்ல முடியுமா? என்னைக்கேட்டால் தலைவலிம்பேன் - பலர் பல்வலி / சிறுநீரகக்கல் வலி / நெஞ்சுவலி எனச் சொல்வார்கள். கை-கால் போய் பலர் கிடக்கும்போது சுண்டுவிரலில் பட்ட காயத்திற்கு அழுதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு முறை - ஒரே ஒரு முறை உங்கள் ஊரில் (அருகில்) இருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள் - நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று தெரியும்
=====================================
பைக்கில் செல்லும்போது இந்த நாய்த்தொல்லை - அப்பப்பா! அதுவும் இருட்டில் செல்லும்போது எதிரே வரும் வண்டியின் வெளிச்சம் நம் கண்களைக் குருடாக்க, அப்போது ஏதாவது நாய் ரோட்டில் வந்தால் ஒரு இழவும் தெரியாது - இதை எப்படிச் சமாளிக்க?
=======================================
ஒரு விவசாயி - சரியாகக் கணக்குப்போட வராது. எப்போதும் சந்தையில் விளைபொருட்களை விற்க தன் மனைவியைத்தான் அனுப்புவான். ஆனால் ஒரு முறை அவளுக்கு உடம்பு சரியில்லாததால் அவனே செல்லவேண்டி வந்தது. "என்னடி செய்ய" என்று மனைவியிடம் கேட்க, அவள் "படி காலனா வீதம் விற்று வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினாள்.
போனவுடன் ஒருவன் வந்து பயிறு ஐந்து படி வேண்டுமென்று கேட்டான், இவனும் படியெடுத்து ஒரு படி அளந்து போட்டவுடன் "காலனா காசு கொடு" என்று கேட்டான்.
வாங்க வந்தவனுக்கு இவன் சரியாகக் கேட்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டு "எனக்கு ஐந்து படி பயிறு வேண்டுமப்பா, இன்னும் நாலு படி போடு" என்றான்
எப்படி ஐந்து படிக்குக் காசு கணக்குப்போடறதுன்னு தெரியாம "ம்க்கும்ம், முதல்ல போட்டதுக்கே இன்னும் காசு கொடுக்கல, இந்த லச்சனத்துல இன்னும் நாலுபடி வேணுமாம்" அப்படின்னானாம்.
உனக்கு ஜெயலலிதாவப் புடிக்காதா? அப்ப நீ தி.மு.க,
பெரியாரை விமர்சனம் செஞ்சா பார்ப்பனர்,
கடவுள் பத்தி கொஞ்சம் சந்தேகம் என்றால் - நாஸ்திகன் - என்னங்க இது அக்கிரமமா இருக்கு (அதும் இணையத்தில் இந்தக் கொடுமை ரொம்ப). நம்ம ஜார்ஜ் புஷ் சொன்ன மாதிரி - நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எங்கள் எதிரிகளுடன் கூட்டாளி என்று அர்த்தம் - இதுவே நம் வழக்கமாகிப்போய் பலருடன் எனக்கு சங்கடம் நேர்ந்திருக்கிறது. சாதாரண கருத்துக்கணிப்புகளிலேயே ஆம்/இல்லை/தெரியாது என சாய்ஸ் இருக்கும்போது ஏன் இந்த பைனரி முடிவு?
=======================================
உலகத்திலேயே ரொம்பக் கொடுமையான வலி எதுனு சொல்ல முடியுமா? என்னைக்கேட்டால் தலைவலிம்பேன் - பலர் பல்வலி / சிறுநீரகக்கல் வலி / நெஞ்சுவலி எனச் சொல்வார்கள். கை-கால் போய் பலர் கிடக்கும்போது சுண்டுவிரலில் பட்ட காயத்திற்கு அழுதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு முறை - ஒரே ஒரு முறை உங்கள் ஊரில் (அருகில்) இருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள் - நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று தெரியும்
=====================================
பைக்கில் செல்லும்போது இந்த நாய்த்தொல்லை - அப்பப்பா! அதுவும் இருட்டில் செல்லும்போது எதிரே வரும் வண்டியின் வெளிச்சம் நம் கண்களைக் குருடாக்க, அப்போது ஏதாவது நாய் ரோட்டில் வந்தால் ஒரு இழவும் தெரியாது - இதை எப்படிச் சமாளிக்க?
=======================================
ஒரு விவசாயி - சரியாகக் கணக்குப்போட வராது. எப்போதும் சந்தையில் விளைபொருட்களை விற்க தன் மனைவியைத்தான் அனுப்புவான். ஆனால் ஒரு முறை அவளுக்கு உடம்பு சரியில்லாததால் அவனே செல்லவேண்டி வந்தது. "என்னடி செய்ய" என்று மனைவியிடம் கேட்க, அவள் "படி காலனா வீதம் விற்று வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினாள்.
போனவுடன் ஒருவன் வந்து பயிறு ஐந்து படி வேண்டுமென்று கேட்டான், இவனும் படியெடுத்து ஒரு படி அளந்து போட்டவுடன் "காலனா காசு கொடு" என்று கேட்டான்.
வாங்க வந்தவனுக்கு இவன் சரியாகக் கேட்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டு "எனக்கு ஐந்து படி பயிறு வேண்டுமப்பா, இன்னும் நாலு படி போடு" என்றான்
எப்படி ஐந்து படிக்குக் காசு கணக்குப்போடறதுன்னு தெரியாம "ம்க்கும்ம், முதல்ல போட்டதுக்கே இன்னும் காசு கொடுக்கல, இந்த லச்சனத்துல இன்னும் நாலுபடி வேணுமாம்" அப்படின்னானாம்.